பண்டைய மருத்துவத்தின் மரபுச் செல்வங்கள்

பண்டைய கால மருத்துவ மரபுச் செல்வங்களை அறிய இலக்கிய இலக்கண நூல்களும், அவற்றின்உரைகளும் அவ்விலக்கியங்களுக்குத் துணையாகக் கல்வெட்டுக்களும், தொல்லியல் சான்றுகளும்துணை நிற்கின்றன. (எ. கா. ) தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்ற நூல்களுடன் கணக்கதிகாரம், அகத்தியர் குழம்பு, போகர் வைத்தியம் , சித்தாராரூடச்சிந்து, சரபேந்திர வைத்திய நூல்கள். நம் மருத்துவ தொழில்நுட்பங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்வழியாகச் சொல்லப்பட்டுவந்தது. ஒரு நிறுவன வழி கற்றல் இல்லை. ஆகவே கற்பித்தல் பொதுமையை எய்தவில்லை .இத்தொழில்நுட்பம் வருவாய்க்குரியதாய் இருந்ததால் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலுக்குள்ளேயே சுழன்று வந்தது. ஆகவே தனியான மருத்துவ நூல்களைக் காண இயலவில்லை. ஆனாலும் தமிழரின் சிந்தனை மரபுகளை இந்தியப் பின்புலத்தில் ...

Read More

கொரோனாவை ஒழிக்கும் கூட்டுச் சிகிச்சைமுறை!

உலகப்போர்கள் வந்து பல ஆண்டுகள் ஆயிற்று – அதன் விளைவுகள் எப்படி இருக்கும்என்று பார்க்கும் வாய்ப்பு இன்று! பக்தியின் ஆழத்தை இறைவன் சோதனை செய்த நிகழ்வுகள் புராண நூல்களில் மட்டுமேவாசித்திருக்கிறோம் – இன்று நேரில் காண்கிறோம்.தன் அணிகலன்க ள் ஒவ்வொன்றும் சிதைக்கப்படுவதன் வன்மத்தை இயற்கை ஒட்டுமொத்தமாக மனித குலம் மீது காட்டுகிறது!பிறப்பு முதல் இறப்பு வரை எதையோ தேடித்தேடி ஓடிக்கொண்டே இருந்த மனிதனுக்கு,சிந்திக்க வேண்டி ஒரு சிறிய இடைவெளி!“கடவுளை மற; மனிதனை நினை” என்னும் முழக்கம் இன்று சொல்லாமல் சொல்ல உணர்த்தப்படுகிறது.பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று படித்த நமக்கு, உயிர்பயம் வந்தால் எதுவெல்லாம் பறந்து போகும் ...

Read More

தமிழக சீர்த்திருத்தக் கிறித்தவத்தின் பண்பாடு ஏற்றல்!

உலகில் எந்தஒரு சமயமும் அதுதோன்றிய சமூகத்திலிருந்து நாடுகடந்தும் கண்டம்கடந்தும்பரவிச் செல்லும்போது, ஆங்காங்கேவேர்கொள்ளும் மனிதகுலம் ஏற்கெனவே பின்பற்றிவந்த சமூக,சமயம்சார்ந்த பண்பாட்டு முறைகளையும் தன்னில் கலந்தாக வேண்டியது தவிர்க்க முடியாததாகிப் போகிறது. இதனால் சிலபோது அச்சமயத்தின் கோட்பாடுகள்கூட தன்னில் திரிவுப்பெற்று மாறுபட்ட கருத்தாக்கத்தோடு பின்பற்றப்பட்டுப் போவதுமுண்டு. இத்தகைய மாற்றங்களுக்கு ஒரு சமயம் இடமளிக்கும் அளவினைப்பொருத்தே அம்மதம் தனது நெகிழ்ச்சித் தன்மையை வெளிக்காட்டுகிறது. இத்தன்மையால் அச்சமயம் அதன் தனித்தன்மையையும் குறைத்துக்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது. இவ்வகையில் தமிழகத்தில் கிறித்தவம் கி.பி முதலாம் நூற்றாண்டு முதலாகவே இயேசுவின்சீடரான புனிதத் தோமா மூலமாக விதைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக கி.பி 14ஆம் நூற்றாண்டுமுதல் கத்தோலிக்க கிறித்தவமும் 18 ஆம் நூற்றாண்டு ...

Read More

கதைத் களத்திலிருந்து கிளைக்கும் எழுத்துக் கோபுரம்

சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரசேவாவின் நேர்காணல்ஒன்றைத் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்தேன்; ஓரிடத்தில் ஒரு படத்தை இயக்குவதற்குமுன்னால் அந்தப் படத்தின் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் அதன்கதைமாந்தர்களுக்குப் பெயரிடுவது, நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவைகுறித்து முடிவு எடுப்பேன் என்கிறார்; இதைப் படித்த கணமே இதைத்தானேஇலக்கியப் படைப்பாக்கம் குறித்துப் பேசுகிற தொல்காப்பியரும் முதற்பொருள்,கருப்பொருள் என்று முன் வைக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் ஓடியதால், அந்தநேர்காணலில் குறிப்பிட்ட அந்தக் கூற்று என் மறதிக்குள் சென்று மறைந்து விடாமல்எனக்குள் நிலைநிறுத்தப்பட்டு விட்டது; இதை ஏன் இங்கேசொல்லிக்கொண்டிருக்கிறேன்என்றால் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவும் படைப்பாக்கத்தின் மேன்மையானஇந்த இரகசியத்தை அறிந்து செயல்படுபவராகத் தன் எழுத்துப் பயணத்தில்இயங்கியுள்ளார் என்பதைத் ...

Read More

இனப்படுகொலையா? போர்க்குற்றமா?

இலங்கைத் தீவில் நடந்தது இனப்படுகொலைதான் என்று தமிழகசட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாணசபையும் ஒருதீர்மானத்தை நிறைவேற்றியது. பெருந்தமிழ்பரப்பில் உள்ள ஆகப்பெரிய சட்டசபைதமிழக சட்டசபைதான். இதுதவிர கனடாவில் உள்ள பிரெம்டன் உள்ளூராட்சிசபையிலும் இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவையாவும்தமிழ்ப்பரப்பில் தமிழ்த் தரப்புகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். இவைதவிர இந்திராகாந்தி 1983ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைத்தீவில்நடப்பது இனப்படுகொலை என்று கூறினார். 83 கறுப்பு ஜூலைக்குப் பின் ஆகஸ்டுமாதம்16ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில்… “இலங்கைத்தீவில் என்ன நடக்கிறது என்றால் அது இனப்படுகொலை தவிர வேறு எதுவுமில்லை“ என்று இந்திராகாந்திகூறினார். இது தவிர, உலகில் உள்ள வேறுஎந்த ஒரு நாட்டின் உத்தியோகபூர்வ குறிப்பிலும் நடந்ததுஇனப்படுகொலை ...

Read More

தகுதியால் தலைமை பெற்றவர் தா. பாண்டியன்

இயற்கை வளம் சூழ்ந்த கொடைக்கானல் அடிவாரத் திலுள்ள வாளாத்தூர் சொக்கதேவன்பட்டி என்னும் ஊர்தான் தோழர் தா. பாண்டியன் அவர்களின் முன்னோர் வாழ்ந்தஇடமாகும்.தற்போதைய தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள வெள்ளைமலைப்பட்டிஎன்னும் சிற்றூரில் நான்காவது மகனாக 18-05-1932 அன்று பாண்டியன் பிறந்தார்.அவரது தந்தையார் டேவிட், தாயார் ரேச்சல் நவமணி ஆகியோர் கிருத்துவ அமைப்பினர் நடத்திய பள்ளியில் ஆசிரியர்களாக அப்போது பணியாற்றி வந்தனர். காமக்காப்பட்டி கள்ளர் சீரமைப்புத் துறையினர் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு,உசிலம்பட்டியில் இருந்த மதுரை மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பயின்றார்.எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, ஆசிரியராக இருக்கும் தந்தையிடம் எழுதி வாங்கிப் பேசுவார்என்ற எண்ணத்தில் பாண்டியனின் ஆசிரியர் வரைப் ...

Read More

73,000 ஆண்டுகள் பழமையான ஹேஷ்டேக் (#, hashtag) குறியீடு

ம னிதர்களின் வர லாற்றுக் கு முந்தைய கலாச்சாரம் அல்லது மனிதர்களின் முன்னேற்றம்என்பது, கல்லாலான கருவிகளை உருவாக்கியதும், அவற்றைப் பயன்படுத்தியதுமான செயல்களை அடிப்படையாகக் கொண்டது. அப்படிக் கல்லாலான கருவிகளைப் பயன்படுத்திய காலம், பொதுவாக ‘கற்காலம்’ (Stone Age) எனப்படுகிறது. 3.3 மில்லியன் (33 இலட்சம்) ஆண்டுகளுக்கு முன் துவங்கும் கற்காலம் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. 1 பழையகற்காலம் (Paleo-lithic period): மனிதர்கள் முதன் முதலாகக் கல்லைக் கருவிகளாகப் பயன்படுத்திய காலம். பாறையிலிருந்துஉடைக்கப்பட்ட (chipped) ஒழுங்கற்ற கூர்மையான கற்களைப் பயன்படுத்திய காலகட்டம். 2 இடைக் கற்காலம் (Meso-lithic period): உடைக்கப்பட்ட, வடிவ-ஒழுங்கற்ற கற்கள் மற்றும் தேய்க்கப்பட்ட (polished) வடிவ-ஒழுங்கானகற்களாலான கருவிகளைப் பயன்படுத்திய காலம். 3 புதிய ...

Read More

இளவேனில் என்னும் மக்கள் கலைஞன்

சென்னை மக்களால் டி.யு.சி.எஸ். எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பெருமைமிகு கூட்டுறவு நிறுவனத்தில் 1975ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். பழமையான அந்த டி.யு.சி.எஸ். தொழிலாளர் சங்கத்திற்கு நான் பணியில் சேர்ந்த மூன்றே நடந்த தேர்தலில் நான் வெற்றிபெற்றுநிர்வாகப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். தோழர் சி. கெ. மாதவன் தலைவராகவும், திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு துணைத்தலைவராகவும், பூ .சி . பால சுப்பிரமணியன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேனாம்பேட்டையிலிருந்த திருநாவுக்கரசின் ‘நம் நாடு’ அச்சகத்தின் ஒரு பகுதியில்தான் தொழிற்சங்கத்தின் அலுவலகம் செயல்பட்டுவந்தது. விடுமுறை நாட்களில் அரசியல் வகுப்புகள், தொழிற்சங்க வகுப்புகள், புத்தகங்கள் வாசித்துப் பகிர்வது எல்லாம் நடக்கும். அங்கு வழக்கமாகதிருநாவுக்கரசு அவர்களைச் சந்திக்கவரும் ...

Read More

என் இதழியல் ஆசான் இளவேனில்

ஓர் உரைநடைஎழுத்து கவிதையைப்போல நம்மைக் கட்டிப்போட வைக்க முடியுமா?முடிந்ததே. கவிதை என்ற பெயரில் பலரும் மோசமான உரைநடையைஎழுதிக்கொண்டிருந்தபோது இளவேனிலின் கார்க்கி இதழ் எழுத்துகள் தேர்ந்த கவிதைகளை விடவும் மேலாக நம்மைக் கிறுகிறுத்துப்போய் மயங்கித் திளைக்கவைத்ததே. இதை யாரும் மறுக்க முடியுமா? எழுபதுகளில் ‘கார்க்கி’ பத்திரிகையில் இளவேனில் எழுதிய கட்டுரைகளை மாந்திமாந்தி, மாணவர்களான நானும் என் நண்பர்களும் மயங்கிக்கிடந்தோமே,மைதாஸ் கதையில் வருவதுபோல, ’கார்க்கி’யைத் தீண்டியவர் அனைவருமே தங்களுக்கு முன்னால் கனவாய் விரிந்த பொன்னுலகில் மிதந்தனரே. அதையெல்லாம் மறக்க முடியுமா? அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நான் வடசென்னையிலுள்ள தங்கசாலைப் பகுதியில்வசித்துவந்தேன். என்னுடைய பள்ளி நண்பர்களான நடேசனும் சம்பத் குமாரும் என்னைப்போலமுற்போக்கு இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர்களாக ...

Read More