Author name: admin

இங்கிலாந்தில் சட்டமும் திட்டமும் (யூஜெனிக்ஸ் சித்தாந்தம்)

இங்கிலாந்தில் இருபத்திநாலு வாரங்களுக்கு மேல் கர்ப்பத்தில் இருக்கும் கருவை கருச்சிதைவு மூலம் அழிப்பது சட்டவிரோதமானது. விதிவிலக்காக, கருவில் இருக்கும் சிசு பிறந்த பின் அங்கவீனமான அல்லது “ substantial risk “ உள்ள குழந்தையாக வளரும் என்றுgenetic screening மற்றும் இன்னபிற மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறியும் பட்சத்திலோ அல்லதுஅந்தக்குழந்தை பிறந்த பின் இருதய அறுவைச் சிகிச்சைகள் போன்ற கணிசமான மருந்துவ தலையீடுகள் /உதவிகள் இல்லாமல் பிழைக்க மாட்டாது என்று தெரிந்தாலோ அதை 24 வாரங்கள் தாண்டிய …

இங்கிலாந்தில் சட்டமும் திட்டமும் (யூஜெனிக்ஸ் சித்தாந்தம்) Read More »

சித்த மருத்துவத்தை உலகறியச் செய்ய ஏழு செயல் திட்டம்

கலைஞர் அவர்களின் ஆட்சிகாலத்தில், பேராசிரியர் அன்பழகன் அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வெளியிடப்படாமல்இருப்பது கண்டு, அதற்கான நிதியுதவிகளைக் கொடுத்து, பல மருத்துவச் சுவடிகளைப் புத்தகமாக வெளியே கொண்டு வந்தா ர்கள். அப்படித்தான், பழனியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த, முருகனின் சீடரான போகர் சித்தரின் பாரம்பரிய மருத்துவச் சுவடிகளில் பல முதன்முதலில் புத்தக வடிவில் வெளிவந்தன. அவை மறுபதிப்பு செய்யப்படாததால், அப்படியான புத்தகங்கள் இருந்ததே நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இன்னமும், பல சித்த மருத்துவச்சுவடிகள், …

சித்த மருத்துவத்தை உலகறியச் செய்ய ஏழு செயல் திட்டம் Read More »

“எனக்காக என்ரை பிள்ளை காத்துக் கிடந்திருக்கிறான்”

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உத்தேசமாக 1950 – 60 களில் ஆரம்பித்து 1983 களில்வீரியமடைந்து 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றிருந்தாலும் இன்னும் முடிவுறாதஉள்நாட்டுப் பிரச்சனையாக நீட்சி யுற்றுக் கொண்டிருப்பதை அறிவோம். முழு சுதந்திரத்தோடுவாழ அனுமதிக்கப் படவில்லை. புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் சொந்த நாடு வந்து குடியேறிவாழ்வதற்கான சூழல்களும் உருவாக்கப் படவில்லை. தமிழ் மக்கள் சிறுபான்மை இன மனஉணர்வோடும், அகதி, கைதிகளின் மன உணர்வோடும்தான் வாழ அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். நிதர்சனமாக சொல்வதானால் ஏராளமான நெருக்கடிகள் அவர்களை இன்னும் துரத்திக் …

“எனக்காக என்ரை பிள்ளை காத்துக் கிடந்திருக்கிறான்” Read More »

நெடுவழி நினைவுகள்

பெரியார் இல்லாத மண்ணில், பெரியார் உயிருடனிருந்த காலத்தில் பெரியார் தன்னிடம்பேசியது போல் கால் நுழைக்கிறார் அ.ச. ஞானசம்பந்தம் என்ற தமிழறிஞர். கி.பார்த்திபராஜா சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். தமிழ்த்துறை கருத்தரங்கத்திற்கு அ.ச.ஞானசம்பந்தனை அழைத்து வருவதும் அவரது சிறப்புரை முடிந்தபின் இல்லத்தில் போய்ச் சேர்ப்பதுமான பொறுப்பு கி.பார்த்திப ராஜாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தமிழ்ப் புலமையே உருத்திரண்டது போல் திசையெல்லாம்வியந்து நோக்கும் ஒருவரை அழைத்துச் சென்று வரப் போகிறோம் என பார்த்திப ராஜாவுக்குபெருமிதம். சிறப்புரையில் ஞானசம்பந்தம் தனக்கும் தந்தை …

நெடுவழி நினைவுகள் Read More »

2021 ஜூலை இதழ்/ ஒரு திருத்தம்

காக்கைச் சிறகினிலே ஜூலை 2021 இதழில் பக்கம் 32இல் உள்ள படம், தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. எனவே, கட்டுரைக்குத் தொடர்பில்லாத அந்தப்படம் நீக்கப்பட்டு, திருத்திய இதழாக இணையத்தில் காக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இணையவழி இதழைப் பெற்றவர்கள், அதைப் பொருட்படுத்த வேண்டாம். தவறுதலுக்கு வருந்துகிறோம். -பொறுப்பாசிரியர், காக்கைச் சிறகினிலே,

செல்வந்த நாடுகளின் பதுக்கலும் வறிய நாடுகளின் பரிதாபநிலையும்

கொரோனா பெருந்தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கானதனிநபர்-சமூக முடக்கங்கள்தொடர்கின்ற அதேவேளை, பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தத்தொடங்கிவிட்டன. கடந்த 2020 டிசம்பரிலிருந்து தடுப்பூசி செலுத்துகின்றசெயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. உலகளாவிய மானிடப் பேரவலத்தை ஏற்படுத்திய இந்தத் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியிலும் அரசியல் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது இதிலுள்ள கசப்பானயதார்த்தம். மனிதாபிமான மற்றும் மருத்துவ அடிப்படைகளுடன் நீதியான முறை யி ல்மேற்கொள்ள ப்படவ வேண்டிய – நாடுகளுக்கிடையிலான தடுப்பூசி பங்கீட்டில் –பொருளாதார பலம்மிக்க நாடுகள் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. முந்திக்கொண்ட செல்வந்த நாடுகள் அதாவது …

செல்வந்த நாடுகளின் பதுக்கலும் வறிய நாடுகளின் பரிதாபநிலையும் Read More »

நானும் கொரோனாவும்

சென்ற ஆண்டு 2020 பிப்ரவரி இறுதி தொடங்கி பத்து மாதம் ஊரடங்கில் வீட்டில்முடங்கிக் கிடந்த ஏக்கத்தில் 2021 ஜனவரி தொடங்கி மார்ச் வரையில் தொடர்ந் து இலக்கியகூட்டங்களுக்காகபல ஊர்கள் செல்ல ஆரம்பித்தேன். மாசத்தில் சில நாட்களே வீட்டிலிருந்தேன். ஏப்ரல் 1ஆம் தேதி விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணன் அவர்கள் கோவையில் ஏற்பாடு செய்தஇலக்கியக் கூட்டத்துக்கு சென்றுவிட்டு 3ஆம் தேதி சென்னை திரும்பினேன். 4ஆம் தேதி முதல் ஜுரம், இருமல் இருந்தது. அது சாதாரண ஜுரம் என்று அசட்டையாகஇருந்துவிட்டேன். …

நானும் கொரோனாவும் Read More »

பண்டைய மருத்துவத்தின் மரபுச் செல்வங்கள்

பண்டைய கால மருத்துவ மரபுச் செல்வங்களை அறிய இலக்கிய இலக்கண நூல்களும், அவற்றின்உரைகளும் அவ்விலக்கியங்களுக்குத் துணையாகக் கல்வெட்டுக்களும், தொல்லியல் சான்றுகளும்துணை நிற்கின்றன. (எ. கா. ) தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்ற நூல்களுடன் கணக்கதிகாரம், அகத்தியர் குழம்பு, போகர் வைத்தியம் , சித்தாராரூடச்சிந்து, சரபேந்திர வைத்திய நூல்கள். நம் மருத்துவ தொழில்நுட்பங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்வழியாகச் சொல்லப்பட்டுவந்தது. ஒரு நிறுவன வழி கற்றல் இல்லை. ஆகவே கற்பித்தல் பொதுமையை எய்தவில்லை .இத்தொழில்நுட்பம் வருவாய்க்குரியதாய் இருந்ததால் ஒரு குறிப்பிட்ட …

பண்டைய மருத்துவத்தின் மரபுச் செல்வங்கள் Read More »

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!